திங்கள், ஜூலை 27, 2009

எதிர்காலம் பற்றிய தேடல்

இலங்கையில் தமிழர்கள் எதிர்காலம் பற்றிய தேடல் மீது முதலில் ஷோபாசக்தியால் எழுதப்பட்ட கட்டுரையை ஆர்வமிக்க அன்பர்களின் பார்வைக்கு இடுகையிட்டிருந்தேன். அதனைத் தொடர்ந்து படிப்பவர்களின் சிந்தனையைத் துண்டும் வண்ணம் அமைநத்துள்ள யமுனா ராஜேந்திரனின் கட்டுரையை உங்கள் பார்வைக்கும் அதன் மீதான சிந்தனைக்கும் தருகிறேன். கீழுள்ள கட்டுரை உயிரோசை இணைய இதழில் வெளிவந்தது.
யமுனா ராஜேந்திரன் தமிழ் வாசகர்களிடமும், தமிழ் சிந்தனையாளர்களிடமும் அறிமுகம் வேண்டாதவர். அரசியல், சினிமா, இலக்கியம், மொழிபெயர்ப்பு என பல விடயங்களில் நீண்டகால ஈடுபாடு கொண்ட கட்டுரையாளர், பேச்சாளர். அவர் தமிழருக்கு அறியத்தந்த விஷயங்கள் நிறைய என்றால் அது மிகையில்லை.. லத்தின் அமெரிக்காவின் புரட்சியாளர்களையும் மத்திய கிழக்கின் கவிஞர்களையும் பெரும் உழைப்பினுடாகத் தேடி அறிமுகம் செய்தார். ஐரோப்பாவிலிருந்து வெளிவந்த விடுதலைப்புலிகளின் அல்லது அவர்களது ஆதரவு பத்திரிகைகளும், வானொலிகளும், தொலைக்காட்சிகளும் அவருடைய எழுத்துக்களை தொடர்ந்து பிரசுரித்தன, வெளியிட்டன. லணடனில் இயங்கும் ஐ. பி.சி. வானொலியில் பல காலம் தரமான நேர்முகங்களையும் நிகழ்ச்சிகளையும் சன்மானம் எதுவும பெற்றுக் கொள்ளாமலே செய்தார்.அவருடைய சிந்தனையில் உதித்த கட்டுரையை உங்கள் கவனத்திற்கு இடுகிறேன்.

மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் : வியட்நாம் மற்றும் பொலிவிய அனுபவங்கள்

யமுனா ராஜேந்திரன்
தமது சர்வதேசிய உரிமைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தில் ஒன்றிணைந்த மக்களை, அந்த ஒன்றுபட்ட மக்களின் எதிர்ப்பை, உலகின் மிகப்பெரிய வலிமை வாய்ந்த பொருளாதார அல்லது ராணுவ சக்தி என்பது என்றும் வெற்றி கொள்ள முடியாது என்பதைத்தான் இதுவரையிலான வரலாற்று உண்மை தெளிவுபடுத்துகிறது. அதிகாரத்திற்கு ஒரு எல்லை உண்டு. அமெரிக்காவும் அதனோடு இணைந்திருக்கும் வல்லரசுகளும் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது அதிகாரம் மிகப்பெரியதாக இருக்கலாம். தவிர்க்க முடியாமல் அதற்கு வரம்பு உண்டு. அனாதிகாலம் தொட்டு, அது சோசலிச சமூகமோ அது முதலாளித்துவ சமூகமோ எதுவானாலும், மக்களின் நலனுக்காக நீங்கள் கடமையாற்றுவீர்களானால் அந்தக் காரியங்கள் உங்களுக்கு நல்லது செய்யும். மக்களுக்கு எதிராக நீங்கள் காரியம் ஆற்றுவீர்களானால் அதே காரியங்கள் உங்களுக்கு எதிராகவே திரும்பும்.
வியட்நாமிய மக்கள் படையின் தளபதி
ஜெனரல் நிகுயன் கியாப்

கட்டுரையைத் தொடர்ந்து படிக்க அன்பர்கள் கட்டுரையின் தலைப்பை அல்லது கீழுள்ள இணைப்பை அழுத்துமாறு வேண்டுகிறேன்.
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=1758




கருத்துகள் இல்லை: