வெள்ளி, ஜூலை 17, 2009

பிரபாகரன் ஜீவிக்கிறார்



எமது தாய் மண்ணில் நடந்து முடிந்தவை மிகுதியான மனக்கவலையையும் தீராத சோகத்தையும் தருகின்ற போதிலும் நாம் வாழும் சமுகத்தின் மீது அக்கறை கொள்ளும் அனைவரும், அச்சமுகத்தின் எதிர்காலம் தொடர்பாக விருப்பு வெறுப்புக்களை தாண்டிய நிலையில் கருத்துப பரிமாற்றம் ஒன்றை நிகழ்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நோக்கத்தை முன்வைத்து, எனது மனப்பரப்பில் நிகழ்ந்த அனைத்து அவலங்களையும் தாண்டி, கீழுள்ள கட்டுரையை உங்கள் கவனத்திற்கு இடுகையிடுகிறேன். தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து எமது சமுகம் பற்றிய உங்கள் அக்கறையை அறியத்தாருங்கள்.

பின்வரும் கட்டுரை எழுத்தாளரும், கட்டுரையாளரும் சமூக நல செயல்பாட்டாளருமான ஷோபாசக்தியால் எழுதப்பட்டது. அவருடைய வலைத்தளத்திலிருந்து இதனைப் பிரதி செய்துள்ளேன்.

பிரபாகரன் ஜீவிக்கிறார்

சரியாக இருபத்தைந்து வருடங்களிற்கு முன்பாக நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமில் இருந்தபோது ஒவ்வொருநாள் காலையிலும் நாங்கள் ஏற்கும் உறுதிமொழியின் வாசகங்கள் இப்போது எனக்கு முழுமையாக ஞாபகத்திலில்லை எனினும் அந்த உறுதிமொழியின் முதல் வரியும் இறுதி வரியும் எனக்கு இன்னமும் நினைவிலுள்ளன. உறுதிமொழியின் முதல்வரி “எமது புரட்சிகர இயக்கத்தின் புனித இலட்சியமாம் சோசலிஸ தமிழீழம் அடைய” என்பதாய் இருக்கும். இறுதிவரி “எனது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்பேனென்றும் உறுதியேற்கிறேன்” என்பதாக இருக்கும்.

தலை கோடரியால் பிளக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருந்த எனது முன்னாள் தலைவரின் உடலத்தை இணையத்தளத்தில் நான் பார்க்க நேரிட்டபோது எனது கண்கள் தாழ்ந்துபோயின. அந்த உடலம் அவருடையதுதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.
....... கட்டுரையை தொடர்ந்து படிக்க அன்பர்கள் கீழ்வரும் தொடுப்பை அழுத்துமாறு வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: